Pages

Menu

பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக்கொலை: மாணவர்கள் வெறிச்செயல்

Thursday 10 October 2013



        தூத்துக்குடி அருகே வல்லநாட்டில், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மூன்று பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.


        தூத்துக்குடி - திருநெல்வேலி ரோட்டில், "இன்பேன்ட் ஜீசஸ் இன்ஜி., கல்லூரி" வளாகத்தில், "இன்பர்மேஷன் டெக்னாலஜி" கல்லூரியும் உள்ளது. இங்கு, 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்லூரி முதல்வராக, திருநெல்வேலி சேர்ந்த சுரேஷ் பணியாற்றினார்.

        கல்லூரிக்கு பஸ்சில் வரும் மாணவியரை, சில மாணவர்கள் கேலி செய்தனர்; இதனால், கடந்த 7ம் தேதி, மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை விசாரித்த, முதல்வர் சுரேஷ், "ஏரோ நாட்டிக்கல்" பிரிவில், மூன்றாம் ஆண்டு படிக்கும், நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியை சேர்ந்த, மாணவர், பிச்சைகண்ணனை, 22, என்ற மாணவரை இடைநீக்கம் செய்தார்.

         இதனால், ஆத்திரமடைந்த பிச்சைகண்ணனின், நண்பர்களான டேனிஷ், 24, பிரபாகரன், 22, ஆகியோர், பிச்சைகண்ணனுடன் சேர்ந்து முதல்வர் சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு, கல்லூரிக்கு வந்து முதல்வர் அறை முன், காத்திருந்தனர். 8.25 மணிக்கு, காரில் இருந்து இறங்கி, முதல்வர் அறைக்கு சென்ற சுரேஷை கத்தி, அரிவாளால் தாக்கினர்.

          காயம் அடைந்த சுரேஷ், உயிருக்கு போராடினார். நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கொலையாளிகள் தப்பி, மலைப்பகுதிக்கு ஓடினர். அங்கிருந்த வனக்காவலர்கள், ரத்தக்கறையுடன் வந்த மூன்று மாணவர்களையும் பிடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அத்துடன், கல்லூரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வரும், 17ம் தேதி வரை, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags