சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்துக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பின்னணியில் இயங்கும், ஓ.பி.சி.டபிள்யு., என்ற
இந்த அமைப்பில், 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த, 97ம் ஆண்டு,
நிறுவப்பட்ட இந்த அமைப்பு, ரசாயன ஆயுதங்களை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல்
போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த, 16 ஆண்டுகளில், ஓ.பி.சி.டபிள்யு., அமைப்பு, 57 ஆயிரம் டன், ரசாயன
ஆயுதங்களை அழித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான ஆயுதங்கள், அமெரிக்கா
மற்றும் ரஷ்யாவை சேர்ந்தவை. தற்போது, இந்த அமைப்பு, சிரியா நாட்டில், ரசாயன
ஆயுதங்களை அழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணி, அடுத்த
ஆண்டு மத்தியில் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஓ.பி.சி.டபிள்யு.,
அமைப்பின் இந்த அரிய சேவையை பாராட்டி, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment